Bootstrap

பசறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது !

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொளும்புவத்தை தெல்கொல் ஓய பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை  நேற்று  திங்கட்கிழமை (26) பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்து சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவரை கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் தொளும்புவத்தை பகுதியைச் சேர்ந்த 65 ,  46 ,  44 வயதுடையவர்கள் ஆவர்.

மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களையும் மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் விஷேட அதிரடிப் படையினரால் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பசறை பொலிஸார் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc