Bootstrap

ஷேக் ஹஸீனாவை விரட்டிய பங்களாதேஷ் ‘அரகலய’

பங்­க­ளா­தேஷில் இந்த வாரம் நடை­பெற்ற நிகழ்­வுகள் அந்­நாட்டின் வர­லாற்­றையே புரட்­டிப்­போட்­டுள்­ளன. வேலை­வாய்ப்­பு­களில் நியா­ய­மான இட ஒதுக்­கீடு கோரி ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம், எதிர்­பா­ராத வித­மாக பிர­தமர் ஷேக் ஹஸீ­னா­வையே நாட்டை விட்டு விரட்­டி­ய­டிக்­கு­ம­ளவு வீரியம் பெற்­றி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 2022 இல் இலங்­கையில் நடந்த அர­க­ல­ய­வுக்கும் இப்­போது பங்­க­ளா­தேஷில் நடக்கும் நிகழ்­வு­க­ளுக்­கு­மி­டையில் பெரி­ய­ளவு வேறு­பா­டுகள் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

கடந்த 1971 ஆம் ஆண்டு பங்­க­ளா­தேஷின் விடு­தலைப் போராட்­டத்தில் உயி­ரி­ழந்த படை­வீ­ரர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு அரசு வேலை வாய்ப்­பு­களில் 30 சத­வீதம் இட­ஒ­துக்­கீடு வழங்க வேண்டும் என்ற நீதி­மன்­றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாண­வர்கள் போராட்­டத்தில் குதித்­தனர். போராட்­டக்­கா­ரர்கள் மீது காவல்­து­றை­யினர் நடத்­திய தாக்­கு­தலில் 200-க்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­தனர்.

இந்­நி­லையில், பொலிஸை ஏவி போராட்­டக்­கா­ரர்­களைக் கொன்­ற­தற்கு நீதி கேட்டு கடந்த ஞாயி­றன்று பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள், பங்­க­ளா­தேஷ் தலை­நகர் டாக்­காவின் மத்­திய சதுக்­கத்தில் குவியத் தொடங்­கினர். மேலும், பல்­வேறு நக­ரங்­க­ளிலும் போராட்டம் வெடித்­தது. பிர­தமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்­டக்­கா­ரர்கள், இனி மக்கள் யாரும் அர­சுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழி­யர்கள் மற்றும் மற்றும் ஆடைத்துறை தொழி­லா­ளர்கள் வேலை நிறுத்தம் மேற்­கொள்ள வேண்டும் என்றும் நாடு தழு­விய ஒத்­து­ழை­யாமை போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­தனர்.

கட்­டி­டங்கள், வாக­னங்­க­ளுக்கு போராட்­டக்­கா­ரர்கள் தீவைத்­தனர். போராட்­டத்தைக் கட்­டுப்­ப­டுத்த காவல் துறை­யினர் கையெறி குண்­டு­களை வீசினர். போராட்­டக்­கா­ரர்­களும் பொலிஸார் மீது பதில் தாக்­குதல் நடத்­தினர். இதில் 14 பொலிஸார் உயி­ரி­ழந்­தனர்.

ஷேக் ஹஸீனா அர­சுக்கு அர­சுக்கு எதி­ராக மாண­வர்கள் போராட்டம் தீவி­ர­ம­டைந்த நிலையில், ஞாயிறு மாலை நாடு தழு­விய ரீதியில் ஊர­டங்கு அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. மேலும், இணைய சேவையும் முடக்­கப்­பட்­ட­துடன் 3 நாள் தேசிய விடு­மு­றையும் அறி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் பங்­க­ளா­தேஷின் பல்­வேறு இடங்­களில் நடை­பெற்ற வன்­மு­றையில் 119 பேர் கொல்­லப்­பட்­ட­தாக அந்த நாட்டு ஊட­கங்­களில் செய்தி வெளி­யா­கிது. போராட்­டங்கள் ஆரம்­பித்த கடந்த ஒரு மாத காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற வன்­மு­றை­களுல் மொத்தம் 440 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில், முப்­படை தள­ப­திகள், காவல் துறை தலைவர் உட்­பட பல்­வேறு பாது­காப்பு அதி­கா­ரி­களை சந்­தித்து ஆலோ­சனை நடத்­திய பிர­தமர் ஷேக் ஹசீனா “அர­சுக்கு எதி­ராக போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்கள் மாண­வர்கள் இல்லை. அவர்கள் தீவி­ர­வா­திகள். நாட்டை சீர்­கு­லைக்கும் நோக்கில் அவர்கள் இந்தப் போராட்­டத்தில் இறங்­கி­யுள்­ளனர். மக்கள் இந்த நாச வேலையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என தெரி­வித்தார்.

எனினும் மாண­வர்கள் முன்­னெ­டுத்த போராட்டம் பெரி­தாகி, இலட்­சக்­க­ணக்­கான மக்கள் தெருக்­களில் இறங்கியதால் அவரால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. பதவியை இராஜினாமாச் செய்து நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அவருக்க வேறு வழி இருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பிர­தமர் பத­வியை ராஜி­னாமா செய்­தது மட்­டு­மல்­லாமல், தனது சகோ­த­ரி­யுடன் நாட்டை விட்டும் வெளி­யே­றினார்.

ஷேக் ஹசீனா பங்­க­ளா­தேஷில் இருந்து இந்­தி­யா­வின் டெல்லியை ஹெலி­கொப்டர் மூலம் சென்றடைந்தார். இந்­திய விமா­னப்­படை, பலத்த பாது­காப்­புடன் அவரை டெல்­லிக்கு அழைத்து வந்­தது.

“இந்­திய விமா­னப்­படை திங்­கட்­கி­ழமை பிற்­பகல் 3 மணி­ய­ளவில், தாழ்­வாகப் பறக்கும் விமானம் ஒன்று இந்­தி­யாவை நோக்கி வரு­வதைக் கண்­டது. அந்த விமா­னத்தில் வரு­வது யார் என்ற தகவல் விமா­னப்­படை வீரர்­க­ளிடம் இருந்­ததால் விமானம் இந்­தி­யா­வுக்குள் நுழைய அனு­ம­திக்­கப்­பட்­டது” என்று ஏஎன்ஐ முகமை கூறி­யுள்­ளது.

தற்போது இந்தியாவில் தங்கியுள்ள அவர் ஐரோப்பிய நாடு ஒன்றில் தஞ்சமடைய முயற்சித்து வருவதாக தெரிகிறது. எனினும் மேலும் சில வாரங்களுக்கு அவர் இந்தியாவிலேயே தங்கியிருப்பார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இனி அர­சி­ய­லுக்கு திரும்ப மாட்டார்

ஷேக் ஹசீனா இனி அர­சி­ய­லுக்கு திரும்ப மாட்டார் என்று அவ­ரது மகனும் தலைமை ஆலோ­ச­க­ரு­மான சஜீப் வஜீத் தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து தனியார் ஊட­கத்­திடம் தெரி­வித்த அவர், “இவ்­வ­ளவு கடின உழைப்­புக்குப் பிறகும் மக்கள் தனக்கு எதி­ராக திரும்­பி­யதால் ஷேக் ஹசீனா மிகவும் அதி­ருப்­தி­ய­டைந்துள்ளார். ஷேக் ஹசீனா பிர­தமர் பத­வியில் இருந்து வில­கு­வது குறித்து ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் ஆலோ­சித்து வந்தார். இனி அவர் அர­சி­ய­லுக்கு திரும்பி வர­மாட்டார். அவர் இந்த நாட்­டையே தலை­கீ­ழாக மாற்­றினார். அவர் ஆட்­சிக்கு வரும்­போது இது ஒரு வீழ்ச்­சி­ய­டைந்த நாடாக இருந்­தது. ஏழை நாடாக கரு­தப்­பட்­டது. ஆனால் இப்­போது இந்த நாடு ஆசி­யாவின் அதிகம் வளரும் நாடு­களில் ஒன்­றாக இருக்­கி­றது” எனத் தெரி­வித்­துள்ளார்.

பிர­தமர் மாளி­கையை சூறை­யா­டிய போராட்­டக்­கா­ரர்கள்

போராட்­டக்­கா­ரர்கள் பங்களாதேஷ் தலை­நகர் டாக்­காவில் உள்ள பிர­த­மரின் அதி­கா­ர­பூர்வ இல்­லத்­துக்குள் நுழைந்து சூறை­யா­டினர். பிர­தமர் பத­வியை ராஜி­னாமா செய்து டாக்­காவில் இருந்து இரா­ணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஷேக் ஹசீனா வெளி­யே­றிய நிலையில், பிர­த­மரின் அதி­கா­ர­பூர்வ இல்­லத்­துக்குள் நுழைந்து கையில் சிக்­கு­வதை எடுத்­துக்­கொண்டு ஓடினர். சிலர் முக்­கிய ஆவ­ணங்­களை கிழித்­தெறிந்தனர்.

கைகளில் தடி­க­ளுடன் அதி­கா­ரி­களின் பாது­காப்பை மீறி பிர­தமர் இல்­லத்­துக்குள் நுழைந்த போராட்­டக்­கா­ரர்கள் அங்­கி­ருந்து ஆட்­டுக்­குட்டி, முயல், வாத்து என்று கிடைத்த பொருட்­களை எடுத்துச் சென்ற காட்­சிகள் வெளி­யா­கி­யுள்­ளன. சிலர், பிர­த­மரின் நாற்­கா­லியில் அமர்ந்­து­கொண்டு புகைப்­படம் எடுத்­தனர். இன்னும் சிலர் அங்­கி­ருந்த உணவுப் பொருட்­களை எடுத்து சாப்­பிட்­டனர். சிலர் பாத்­தி­ரங்கள், மேசை விரிப்­பு­களை எடுத்துச் சென்­றனர். இன்னும் சிலர் அங்­கி­ருக்கும் புல்­வெளி, அழ­கான இடங்கள் முன் புகைப்­படம் எடுத்­தனர். போராட்­டக்­கா­ரர்­களின் செயல்கள் புகைப்­ப­டங்கள், வீடி­யோக்­க­ளாக வெளி­யாகி இணை­யத்தில் கவனம் பெற்­று­வ­ரு­கின்­றன.

மேலும், அவாமி லீக் கட்­சியின் மத்­திய அலு­வ­லகம், அவாமி லீக் கட்­சியின் பல தலை­வர்­களின் குடி­யி­ருப்­புகள் மற்றும் வணிக நிறு­வ­னங்­களும் ஒரே நேரத்தில் போராட்­டக்­கா­ரர்­களால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­ன.

இந்து கோயில்கள் மீதும் தாக்­குதல்

தலை­நகர் டாக்­காவில் இந்­திய கலாச்­சார மையம் போராட்­டக்­கா­ரர்­களால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் நாடு முழு­வதும் 4 இந்துக் கோவில்கள் சேத­ம­டைந்­துள்­ள­ன.

கோயிலுக்கு பாதுகாப்பு வழங்கும் முஸ்லிம்கள்

இது குறித்து தெரி­வித்­துள்ள இந்து பௌத்த கிறிஸ்­தவ ஒற்­றுமை கவுன்சில் தலைவர் கஜோல் தேவ்நாத், டாக்­காவின் தன்­மோந்தி பகு­தியில் அமைந்­துள்ள இந்­திரா காந்தி கலாச்­சார மையம் வன்­முறை கும்­பலால் சேதப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்தார். மேலும் 4 இந்து கோயில்கள் சிறிய அளவில் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

இது தவிர டாக்­காவில் உள்ள பங்­க­பந்து நினைவு அருங்­காட்­சி­யகம் உட்­பட பல்­வேறு முக்­கிய கட்­டி­டங்கள் தீவைத்து கொளுத்­தப்­பட்­டுள்­ளன. பங்­க­பந்து அருங்­காட்­சி­யகம், 1975ஆம் ஆண்டு படு­கொலை செய்­யப்­பட்ட முன்னாள் வங்­க­தேச அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் (ஷேக் ஹசீ­னாவின் தந்தை) நினை­வாக கட்­டப்­பட்­டது. சேத­ம­டைந்த இந்­திய கலாச்­சார மையத்தில் 21 ஆயிரம் புத்­த­கங்கள், பல்­வேறு வர­லாற்று ஆவ­ணங்கள் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

கோயில்­களை இர­வி­ர­வாக பாது­காத்த முஸ்­லிம்கள்

வன்­மு­றை­க­ளின்­போது இந்து கோயில்­களும் ஆர்ப்­பாட்­டக்­காரர்­களால் இலக்கு வைக்­கப்­பட்­டன. அத­னை­ய­டுத்து நாட்­டி­லுள்ள ஏனைய கோயில்­களும் தாக்­கப்­ப­டலாம் என்ற அச்சம் பர­வி­யதால் முஸ்லிம் மக்கள் முன்­வந்து கோயில்­க­ளுக்கு இர­வி­ர­வாக பாது­காப்பு வழங்­கினர்.

முன்னாள் பிர­தமர் பேகம் காலிதா ஸியா விடு­தலை

பங்களாதேஷ் முன்னாள் பிர­தமர் பேகம் காலிதா ஸியா வீட்டு காவலில் இருந்து விடு­விக்­கப்­பட்டுள்ளார். இதற்­கான உத்­த­ரவை அந்­நாட்டு அதிபர் முக­ம்மது சகா­புதீன் பிறப்­பித்­துள்ளார். மேலும், கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை கைது செய்­யப்­பட்ட அனை­வ­ரையும் அதிபர் விடு­தலை செய்­துள்ளார்.

பங்களாதேஷ் தேசி­ய­வாத கட்­சியின் (பி.என்.பி.) தலை­வ­ரான பேகம் காலிதா ஸியா அந்­நாட்டின் முதல் பெண் பிர­தமர் என்ற பெரு­மையை பெற்­றவர்.

அவர், பல ஆண்­டு­க­ளாக அர­சி­யலில் ஈடு­ப­டாமல் வில­கியே இருந்து வரு­கிறார். அவ­ருக்கு நீரி­ழிவு, இரு­தய பாதிப்­புகள் உள்­ளிட்ட பல்­வேறு வியா­திகள் உள்­ளன என மருத்­து­வர்கள் தெரி­வித்­தனர்.

கடந்த காலத்தில், ஷேக் ஹசீ­னா­வுடன் இணைந்து பணி­யாற்­றினார். ஆனால், இருவருக்கு இடையேயான ஒத்துழைப்பு நீண்ட நாட்கள் வரை நீடிக்கவில்லை. அதன்பின் நடந்த தேர்தலில் ஹசீனாவை வீழ்த்தி காலிதா ஸியா வெற்றி பெற்றார். முதல் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த சூழலில், ஷேக் ஹசீனா பிர­த­ம­ரான பின், காலிதா ஸியா­வுக்கு எதி­ராக பல்­வேறு ஊழல் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து அவ­ருக்கு 17 ஆண்­டு­கால சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அவர் வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்டார். ஏறக்­கு­றைய 6 ஆண்­டு­க­ளாக காவலில் இருந்த நிலையில், ஸியாவை விடு­வித்து அதிபர் சகா­புதீன் உத்­த­ர­விட்டு உள்ளார்.

பின்­ன­ணியில் வெளி­நாட்டு சக்­தியா?

பங்­க­ளா­தேஷில் நடந்த இந்த சடு­தி­யான அர­சியல் மாற்­றத்தின் பின்­ன­ணியில் வெளி­நா­டு­களின் மறை­கரம் இருப்­ப­தாக அர­சியல் அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தப் போராட்­டத்தின் பின்­ன­ணியில் இருந்திருக்கலாம் என சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைப்பு

நாட்டில் அர­சியல் ஸ்திர­மின்மை ஏற்­பட்­ட­தை­ய­டுத்து பங்­க­ளாதேஷ் நாடா­ளு­மன்­றத்தை கலைத்து அதிபர் முக­மது சஹா­புதீன் உத்­த­ர­விட்­டுள்ளார். இது தொடர்­பாக அதிபர் மாளிகை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பில், “கடந்த ஜன­வரி 7 ஆம் திகதி நடை­பெற்ற தேசியத் தேர்­தலின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட 12-வது நாடா­ளு­மன்­றத்தை அதிபர் முக­மது சஹா­புதீன் இன்று (ஆகஸ்ட் 6) கலைத்தார். முப்­ப­டை­களின் தலை­வர்கள், பல்­வேறு அர­சியல் கட்சித் தலை­வர்கள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள், பாகு­பா­டு­க­ளுக்கு எதி­ரான மாணவர் இயக்கத் தலை­வர்கள் ஆகி­யோ­ருடன் குடி­ய­ரசுத் தலைவர் நடத்­திய ஆலோ­ச­னையைத் தொடர்ந்து நாடா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்­கப்­பட்­டது.

அர­சி­ய­ல­மைப்­பின்­படி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு 90 நாட்­க­ளுக்கு முன்­பாக தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் முடி­வ­டையும் முன்­பாக நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­மானால் அடுத்த 90 நாட்­க­ளுக்குள் நாடா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். எனவே, வரும் 90 நாட்­க­ளுக்குள் நாடா­ளு­மன்­றத்­துக்கு தேர்தல் நடத்­தப்­பட வேண்­டிய கட்­டாயம் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இத­னி­டையே, வங்­க­தே­சத்தில் இடைக்­கால அரசை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை இராணுவம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை, இராணுவத் தளபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இடைக்கால பிரதமராக பேராசிரியர் முகம்மது யூனுஸ்?

நோபல் பரி­சு­பெற்ற பேரா­சி­ரியர் முகம்­மது யூனுஸ், புதிய அரசின் தலைமை ஆலோ­ச­க­ராக இருக்க வேண்டும் என்று மாண­வர்கள் பிர­தி­நி­திகள் வலி­யு­றுத்தி உள்­ளனர். அவரைத் தவிற வேறு யாரையும் தங்­களால் ஏற்க முடி­யாது என்றும் அவர்கள் கூறி உள்­ளனர். மாண­வர்­களின் கோரிக்­கையை ஏற்று புதிய அரசை வழி­ந­டத்த தயார் என்று முக­மது யூனுஸ் தெரி­வித்­துள்ளார்.

பேராசிரியர் முகம்மது யூனுஸ்

“மாண­வர்கள் மிகப் பெரிய போராட்டம் நடத்தி இருக்­கி­றார்கள். அதற்­காக அவர்கள் மிகப் பெரிய விலையை கொடுத்­தி­ருக்­கி­றார்கள். மாண­வர்­களால் இவ்­வ­ளவு பெரிய தியாகம் செய்ய முடி­யு­மானால், எனக்கும் சில பொறுப்­புகள் உண்டு. எனவே, அவர்கள் கோரிக்­கை­யின்­படி நான் பொறுப்பை ஏற்க முடியும் என்று மாண­வர்­க­ளிடம் கூறினேன்” என்று முக­மது யூனுஸ் கூறி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

தற்­போது பிரான்சில் தங்­கி­யி­ருக்கும் முகம்­மது யூனுஸ் ஓரிரு தினங்­களில் பங்களாதேஷை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு கடன் வழங்குமளவுக்கு பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வந்த பங்களாதேஷில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. உடனடியாக அங்கு ஸ்திரமான ஆட்சி நிறுவப்பட்டு நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரதும் அவாவாகும்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc