Bootstrap

யாழ். பொது நூலக அழிப்பு தமிழ் இனப்படுகொலைகளில் ஒன்று

1981 இல் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டதானது  இலங்கை அரசால் நடத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு முக்கிய கலாசார இனப்படுகொலைகளில் ஒன்றாகும் என பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamil Forum) தெரிவித்துள்ளது.

யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

" ஜூன் 1ஆம் நாள், 1981இல் தமிழர்கள் தமது வரலாற்றுச் சான்றுகளை இழந்த வடுவை நினைவுபடுத்துகின்றது.

வரலாற்றுச் சான்றுகள்

இந்த மீட்டெடுக்க முடியாத அழிவானது, தமிழ் மக்களின் அரிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் போன்றவற்றின் வரலாற்றுச் சான்றுகளை அழிப்பதற்காக  இலங்கை அரசால் நடத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான முக்கிய கலாசார இனப்படுகொலைகளில் ஒன்றாகும்.

இந்நிலையில், பிரித்தானிய தமிழர் பேரவையின் எஸ். எல். ஏ. பி (SLAP) சேகரிக்கும் ஆதாரங்களில் 'யாழ். பொது நூலகம் எரிப்பு' என்ற ஆதாரங்களின் சேகரிப்பு மற்ற ஆதாரங்களுக்கிடையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.

மேலும், பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்கனவே இது தொடர்பாக நம்பகமான ஆதாரங்களுடன் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.

ஆதாரங்கள்

இந்நிலையில், யாழில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள கல்விமான்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் ஆகியோருக்கு யாழ். பொது நூலகம் தமிழ் மக்களின் விலைமதிப்பற்ற சொத்தின் பெருமையாக இருந்தது.

1933இல் ஒரு சாதாரண தொடக்கத்துடன், இது குறிப்பிடத்தக்க தமிழ் ஓலைகள், கையெழுத்துப் பிரதிகள்,  இலங்கையில் போட்டியிட்ட அரசியல் வரலாற்றில் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஆவணங்களின் அசல் பிரதிகள் மற்றும் யாழில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் களஞ்சியமாக யாழ். பொது நூலகம் இருந்தது” என குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், யாழ். பொது நூலகத்தின் பின்னணி, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் மற்றும் பெறப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்டவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc