Bootstrap

பிள்ளையானை பிடித்தால் அனைத்து உண்மைகளும் வெளியாகும்: சாணக்கியன் ! உயிர்த்தஞாயிறு தாக்குதல்.

பிள்ளையான் எம்.பியை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர் தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்து உண்மை தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேலை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன் போது அவர் மேலும் கூறுகையில் உயிர் தாக்குதல் 2019 ஆம் ஆண்டில் நடந்திருந்தாலும் அதனுடன் தொடர்பு உடைய குழுக்கள் 2005 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் செயற்பட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பில் அடிக்கடி கூறியிருந்தாலும் இதன் பாரதூரத் தன்மை தொடர்பில் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். எவ்வாறாயினும் தற்போது 2014 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் புலனாய்வு பிரிவினால் மூன்று இனங்களையும் உள்ளடக்கிய புலனாய்வு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாய்ஸ்இ ஆமி மொகிதின்இ கலீல் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கலில் என்பவர் ஜோசப் பரராச சிங்கத்தின் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று விடுதலை ஆவார்.

2009 ஆம் ஆண்டில் திருகோணமலையில் ஆறு வயது வர்ஷா என்ற சிறுமியின் பெற்றோரிடம் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலைக்குப் பொறுப்பான நேருவின் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜனார்த்தனன்இ நிஷாந்தன்இ ரெஜினோல்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் போலீசாரின் பொறுப்பில் இருந்தபோதே உயிரிழந்துள்ளனர்.

இதே வேளை 8 வயது சிறுவன் ஒருவரும் கப்பம் கோரி 2009 இல் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ பின்னர் அவர்கள் நால்வரும் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

புலனாய்வு பிரிவின் குழுவினர் தமது நோக்கத்திற்காகக் கப்பம் பெறும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன் அதன் பின்னர் கைது செய்யப்படுபவர்களை கொல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் இவ்வாறு பலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடையே என்ன தொடர்பு என்று நினைக்கலாம்இ ஆனால் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்டு கிழக்கில் சித்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் முன்னெடுத்தப்பட்டன அவ்வாறாக பரிசோதிக்கப்பட்ட விடயங்களை பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

ஜோசப் பரராச சிங்கம் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது அவரின் உடலை எரித்துள்ளனர்.எனவே 2005 தொடக்கம் இருந்து ஈஸ்டர் தாக்குதல் வரை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கடைசிக்கு தொடர்பு இருக்கிறது

அதனால் குறித்த எம்.பி.ஐ காப்பாற்ற நினைக்காமல் அவரிடம் உள்ள வாக்குகளை பார்க்காது அவரை கைது செய்தால் 2005 ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் தாக்குதல் வரை உள்ள உண்மைகளை கண்டறியலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc