இருண்ட நினைவுக்கு ஆறாண்டுகள் கடந்து விட்டன

இலங்கையர்களுக்கு மட்டுமன்றி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி இருண்ட நாளாகவே அமையும்.

இன்றைக்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் 2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் கோரத்தில் இருந்து பலரும் இன்னும் விடுபடவில்லை.

இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டனர். பலரும் நிரந்தரமாக ஊனமுற்றவர்களாக மாற்றினர். எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. நீதிக்காக இன்னும் கையேந்தியுள்ளனர் என்பதுதான் உண்மையாகும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு தேர்தலிலும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற வாக்குறுதி, அரசியல் மேடையில் வெறும் பிரச்சார வாக்குறுதியாகவே மாறியது.

தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்காகத் தேவாலயத்திற்குச் சென்ற கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த மத மையத்திலேயே தங்கள் உயிரை இழந்தது ஒரு பெரிய சோகம். மனிதநேயத்தை மதிக்கும் எந்த சூழ்நிலையிலும் நடக்கக்கூடாத ஒரு சூழ்நிலை அது. தடுக்கப்பட்டிருக்கக்கூடிய தாக்குதலைத் தடுக்கவில்லை என்று பலர் அதை விளக்கினர்.

அந்த நேரத்தில் அதிகாரத்தில் இருந்த பலர் இதற்காகக் குற்றம் சாட்டப்பட்டனர். உளவுத்துறை அறிக்கைகள் இதை சுட்டிக்காட்டிய போதிலும், முறையான நடவடிக்கை எடுக்காததற்காக அவர்களுக்கு எதிராக  நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதிகாரத்தைக் கைப்பற்றித் தக்கவைத்துக் கொள்வதற்காக, உளவுத்துறை அறிக்கைகளைப் புறக்கணித்து, உணர்ச்சியற்ற முறையில் செயல்பட்ட ஆளும் வர்க்கமும், அடுத்தடுத்து வந்த அதிகாரிகளும் இருந்தனர் என்பதற்கு இந்த சம்பவம் சான்றாகும். சட்டத்தினாலோ அல்லது வேறு எந்த நிபந்தனையினாலோ அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் மனசாட்சியிலிருந்து அவர்களை விடுவிக்க முடியுமா என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று மக்கள் முன் பலமுறை உறுதியளித்தார். இதற்கான விசாரணைகள் முறையான முறையில் நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு சிறிது காலம் தேவைப்படுவதாகவும், அரசியல் ரீதியாக அடக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான முழுமையான அறிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்குமாறு, ஞாயிற்றுக்கிழமை(20) பணித்திருந்தார்.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் சமூகத்தின் முன் அம்பலப்படுத்தப்பட்டு சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவது அவசியம். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு அரசியல் தொடர்பு இருப்பது இந்த நாட்டில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் அறிந்த உண்மை. அந்த ஊழல் நிறைந்த அரசியல் வர்க்கத்தை சமூகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc