உத்தியோகபூர்வ இல்லம் பறிக்கப்படுமென்றும் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவார்களென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியது, தேர்தலில் அவர்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந் தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
இன்று பலர் கடந்த காலத்தை மறந்துவிட்டதாகக் கூறிய ராஜபக்ஷ தனது உத்தரவின் பேரில் செயல்பட்டு, விடுதலைப் புலிகள் நாட்டிற்கு ஏற்படுத்த முயன்ற பெரும் அழிவைத் தடுத்தவர்கள் முப்படைகளின் வீரமிக்க வீரர்கள் என்றும் கூறினார்.
மத்திய வங்கி குண்டு, தெஹிவளை ரயில் குண்டு, எயார் லங்கா குண்டுவெடிப்பு, மற்றும் கொழும்பு மீது விமானங்கள் மூலம் குண்டுவீச்சு. அந்த நேரத்தில் ஒவ்வொரு வாரமும் கிராமங்களுக்கு வீரர்களின் உடல்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் எத்தனை வந்தன என்பதை ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் நினைவு கூர்ந்தார்.
மேலும் முன்னாள் இந்தியத் தலைவர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச,
அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுத்தது தனது அரசாங்கம்தான் என்றும் மஹிந்த சுட்டிக்காட்டினார்.
நாட்டின் மிகவும் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்பை இழந்ததற்கு பொதுமக்களின் எதிர்வினையை வரவிருக்கும் தேர்தல்களில் அரசாங்கம் அறிய முடியும் என்றும் கூறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அல்லது உத்தியோகபூர்வ இல்லம் குறித்து ஒருபோதும் புகார் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்