Bootstrap

மியன்மார் அகதிகளை திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்றது

இலங்­கையின் வடக்கு முல்லை தீவு கடற்­ப­ரப்பில் அகதி அந்­தஸ்து கோரி, ஆபத்­தான படகுப் பயணம் ஊடாக வருகை தந்த ரோஹிங்ய முஸ்­லிம்கள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பாது­காப்­பாக மீட்­கப்­பட்ட சம்­பவம், அதனை தொடர்ந்த நட­வ­டிக்­கைகள் என்­பன தொடர்ச்­சி­யாக பேசப்­பட்டு வரு­கின்­றது. 115 பேருடன் வந்த இந்த படகில், 25 சிறு­வர்கள் 30 பெண்கள் இருந்­தனர். இவர்­களில் 12 பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­துடன் ஏனையோர் முல்­லைத்­தீவு கடற்­படை முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் இவர்­களை மீண்டும் மியன்­மா­ருக்கே திருப்பி அனுப்­பு­வது குறித்து அந்­நாட்­டுடன் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக இலங்கை அர­சாங்கம் அறி­வித்­துள்­ளமை பல­ரையும் கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. இத்­தீர்­மா­னத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு அர­சி­யல்­வா­திகள், மனித உரிமை ஆர்­வ­லர்கள் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஐக்­கிய நாடுகள் சபையும் இத­னையே வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

“பல்­வேறு அசா­தா­ரண சூழ் நிலை­களால், தமது சொந்த மண்ணை விட்டு வெளி­யேறி பாது­காப்­பான இட­மொன்­றினை தேடிக் கொண்­டி­ருப்­போ­ரையே நாம் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் என விழிக்­கின்றோம். அவர்­களை அர­வ­ணைக்க வேண்­டி­யது மிக அவ­சி­ய­மாகும். அந்த நட­வ­டிக்­கைகள் ஊக்­கு­விக்­கப்­படல் வேண்டும்.

குறிப்­பாக புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் சட்ட விரோத குடி­யேற்­ற­வா­சி­க­ளாக கரு­தப்­பட மாட்­டார்கள்’’ என பிர­பல மனித உரி­மைகள் செயற்­பாட்­டாளர் ருக்கி பெர்­ணான்டோ அண்­மையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இவர்­களின் புக­லிடக் கோரிக்­கைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு, புக­லிட அந்­தஸ்து அல்­லது அகதி அந்­தஸ்து வழங்கும் நாடொன்­றுக்கு அவர்கள் செல்லும் வரை அவர்கள் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளாக அந்­தந்த நாடு­களில் வசிக்­கலாம்.

உண்­மையில் இலங்கை இது­வ­ரையில் அக­தி­களை அனு­ச­ரித்த, அர­வ­ணைத்த முறைமை பாராட்­டத்­தக்­கது. குறிப்­பாக 2005 ஆம் ஆண்டு UNHCR எனும் அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்­து­ட­னான உடன்­ப­டிக்கை பிர­காரம் இலங்கை செயற்­ப­டு­கின்­றது. அது முதல் இலங்­கையில் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் தொடர்பில் அவர்­க­ளுக்கு எதி­ரான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­ட­தாக பெரி­தாக பதி­வில்லை. எனினும் கடந்த 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலப்­ப­கு­தியில் ஒரே­ய­டி­யாக 300 புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை மட்­டுமே ஒப்­பந்­தத்தை மீறி இலங்கை செயற்­பட்­ட­மைக்­கான ஒரே ஒரு சந்­தர்ப்­ப­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

இலங்கை செய்­து­கொண்­டுள்ள ஒப்­பந்தம் பிர­காரம், புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நாட்டில் தங்­கி­யி­ருக்க பூரண அனு­மதி உள்­ளது. திடீ­ரென புக­லிடம் கோரி வரு­ப­வர்கள், அவர்­க­ளுக்­கான தங்­கு­மி­டத்தை தேடிக்­கொள்ளும் வரை இவ்­வாறு முகாமில் தடுத்து வைப்­பது வழ­மை­யாக உள்­ளது.

இலங்­கையை பொறுத்­த­வரை, செய்­து­கொண்­டுள்ள ஒப்­பந்­தத்தில், புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பது அரசின் பொறுப்­பா­கா­த­போ­திலும் இலங்கை ஏற்­றுக்­கொண்­டுள்ள சர்­வ­தேச இணக்­கப்­பா­டுகள், சர்­வ­தேச சம்­பி­ர­தா­யங்கள் பிர­காரம் அரசு அது தொடர்பில் செயற்­பட வேண்­டி­யுள்­ளது. அதுமாத்திரமன்றி இதனை மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் நோக்கி செயற்­பட வேண்­டி­யதும் அதன் தார்­மீக கட­மை­யாகும்.

உண்­மையில், பிலிப்பைன் போன்ற ஆசிய நாடு­களை ஒத்த புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களை அர­வ­ணைக்கும் சட்ட கட்­ட­மைப்­பொன்­றினை இலங்கை உரு­வாக்க வேண்டும். மேலும் சர்­வ­தேச அக­திகள் இணக்­கப்­பாட்டில் இலங்கை கையெ­ழுத்­திட வேண்டும். அப்­போதே புக­லிடக் கோரிக்­கை­யாளர் விட­யத்தில் நாம் காத்­தி­ர­மாக செயற்­பட முடியும்.

இலங்­கை­யர்கள் சுமார் ஒரு மில்­லியன் பேர் வரை வெளி­நா­டு­களில் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளா­கவும், அகதி அந்­தஸ்­துள்­ள­வர்­க­ளா­கவும் வாழும் சூழலில், நாம் உல­க­ளவில் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் தொடர்பில் சாத­க­மான பரி­சீ­ல­னை­களை முன்­னெ­டுப்­பதே மனி­தா­பி­மா­ன­மாகும்.

அந்த வகையில் அர­சாங்கம் இந்த மியன்மார் ரோஹிங்­கிய அகதிகளை உடனடியாக திருப்பி அனுப்புவது பற்றிச் சிந்திக்காது அவர்களது பாதுகாப்பு மற்றும் உயிர்வாழும் உரிமையை கருத்திற் கொண்டு தற்காலிகமாக இலங்கையில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். மேலும் முல்லைத்தீவு முகாமில் அவர்களுக்கான போதிய வசதிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அகதிகளைப் பார்வையிட அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural Newspaper Canada is the first human rights-focused newspaper launched from abroad to serve the Sri Lankan Tamil community. Based in Canada, it aims to highlight human rights issues, political developments, and social challenges faced by Sri Lankan Tamils, both in Sri Lanka and the diaspora. By amplifying marginalized voices, it seeks to foster dialogue and advocate for justice, while offering a platform for critical news, opinions, and analysis from a Tamil perspective.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc