PTAஇன் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 24 பேர் தடுப்பு காவலில்; வழக்கு தொடராது 34 பேருக்கு பிணை; 365 பேர் விடுவிப்பு

பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் உயிர்த்த ஞாயி­று­ பயங்­க­ர வாதத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­றங்­க­ளுக்­காக 24 பேர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் 34 பேர் வழக்­குத்­தொ­ட­ரப்­ப­டாமல் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தகவல் அறியும் உரிமை சட்­டத்தின் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு 54 பேர் வழக்கு தொட­ரப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன், 2019 முதல் 2023 வரை­யான காலப்­ப­கு­தியில் 365 பேர் முழு­மை­யாக விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர் தெரி­ய­வ­ரு­கிற்து.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­துடன் தொடர்­பு­டைய குற்­றங்­க­ளுக்­காக 6 பேரும் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­போரின் எண்­ணிக்கை தொடர்­பான விப­ரங்­களை தகவல் அறியும் உரி­மைச்­சட்­டத்தின் ஊடாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான அம்­பிகா சற்­கு­ண­நாதன் கோரி­யி­ருந்தார். சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் இவ்­வி­வ­கா­ரத்­திற்கு அளிக்கப்­பட்­டுள்ள பதி­லி­யேலே மேற்­கு­றித்த தக­வல்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­பட்­டி­ருக்கும் தர­வு­களின் பிர­காரம், பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­தின்கீழ் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­துடன் தொடர்­பு­டைய குற்­றச்­செ­யல்­க­ளுக்­காக 6 பேர் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன், 34 பேர் வழக்­குத்­தொ­ட­ரப்­ப­டாமல் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். அதே­வேளை வழக்கு தொட­ரப்­பட்டு, பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருப்­போரின் எண்­ணிக்கை 49 ஆகவும், 2020 -– 2023 ஆம் ஆண்­டுக்கு இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் முழு­மை­யாக விடு­விக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை 81 ஆகவும் காணப்­ப­டு­கின்­றது.

அதே­போன்று உயிர்த்த ஞாயி­று­தினப் பயங்­க­ர­வா­தத்­தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­றங்­க­ளுக்­காக இச்­சட்­டத்­தின்கீழ் 24 பேர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன், 34 பேர் வழக்­குத்­தொ­ட­ரப்­ப­டாமல் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு 54 பேர் வழக்கு தொட­ரப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன், 2019 – 2023 வரை­யான காலப்­ப­கு­தியில் 365 பேர் முழு­மை­யாக விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

இது­கு­றித்து தனது உத்­தி­யோ­க­பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதி­வொன்றைச் செய்­தி­ருக்கும் அம்­பிகா சற்­கு­ண­நாதன், இங்கு விடு­விக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை உயர்வாகக் காணப்படுவதானது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னிச்சையான முறையில் கைதுசெய்தல் மற்றும் தடுப்புக்காவலில் வைத்தல் என்பன சாதாரணமாகிவிட்டதைக் காண்பிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி முதலில் கைதுசெய்து, பின்னர் கேள்வி கேட்டல் என்பது இயல்பாகிவிட்டது என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc